ஒமைக்ரான் புதிய மாறுபாட்டினை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் – உலக சுகாதார அமைப்பு

உலக நாடுகளில் தற்போது வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் ஒரு புதிய மாறுபாட்டினை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவாகி, பல நாடுகளில் பரவி வரும் கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமைக்ரான், முதலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்பட்டது. ஆனால் அதன் பரவும் வேகம் அதிகமாக இருந்தாலும், டெல்டாவை விட குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என தகவல் வெளியானது.

உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் கூறுகையில், தற்போது பரவி வரும் ஒமைக்ரான், அதிகம் பரவும் தன்மையை கொண்டதாக உள்ளது எனவும், அதன் பாதிப்பு தன்மை டெல்டாவை விட குறைவாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒமைக்ரான் வைரஸ் ஒரு புதிய மாறுபாட்டினை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளது. அந்த புதிய மாறுபாட்டை கொண்ட வைரஸ் மிகவும் ஆபத்தானதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.