ஃபிக்கி ஃப்ளோ புதிய தலைவராக ஜெயந்தி மனோகர் தேர்வு

 

ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் புதிய தலைவர் பதவியேற்பு விழா இன்று (26.04.18) ரெசிடன்சி டவர்ஸில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரம்மா குமாரிகள் சகோதரி கோதை பங்கேற்று சிறப்புரையாற்றினார். 2018-19 ஆம் ஆண்டிற்கான ஃபிக்கி ஃப்ளோ புதிய தலைவராக ஜெயந்தி மனோகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஃப்ளோ கோயம்புத்தூர் அமைப்பின் 2018-19 ஆம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்களும் பதவியேற்றனர்.

புதிய தலைவர் ஜெயந்தி மனோகர் கூறுகையில், ஃப்ளோ கோயம்புத்தூர் அமைப்பு பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக சமூகத்தில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இது தொழில்முனைவோர் ஒரு புதிய வியாபாரத்தை உருவாக்குவதற்கான மார்க்கெட்டிங் நுட்பங்களில் ஆலோசனை மற்றும் வழிகாட்டாக உருவாக்கியுள்ளது. மேலும், பிரதம மந்திரியின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளோம்.

பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெற அவர்கள் தங்கள் பொருட்களை விற்க இலவச விற்பனையகங்களை வழங்குகிறோம். ஃப்ளோ கோயம்புத்தூர் அமைப்பு பெண்களின் வாழ்க்கையை ஆரம்ப நிலை, நடுத்தர நிலை மற்றும் மூத்த நிலை ஆகிய மூன்று நிலைகளில் மாற்றியமைக்கும் ஒரு வினையூக்கியாக உள்ளது.