காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு – தமிழ்நாடு வேளாண் பல்கலை கணிப்பு

விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாணமைப் பல்கலைக் கழகம் தக்காளி, கத்தரி, வெண்டை ஆகிய காய்கறி விலைகளை கணித்துள்ளது.

தமிழ்நாடு வேளாணமைப் பல்கலையின் தேசிய தோட்டக் கலை வாரியம் அறிக்கையின் படி, 2020-21 ஆம் ஆண்டு இந்தியாவில் தக்காளி 8.52 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 210.03 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் கிஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.

2020-21 ஆம் ஆண்டு இந்தியாவில் கத்தரி 7.58 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 131.54 லட்சம் டன்கள் உற்பத்தியாகும். கிஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், திருவண்ணாமலை மற்றும் வேலூர் கத்தரி பயிரிடுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

வெண்டை 5.11 லட்சம் எக்டர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு 62.19 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளுர், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் வெண்டை அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, ட்டமிழ்நாடு வேளாண் பல்கலையில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கிவரும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், ஓட்டன்சத்திரம் சந்தையில் கடந்த 14 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி, வெண்டை விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது.

ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அறுவடையின் போது தரமான தக்காளியின் பண்ணை விலை ரூ.35 முதல் ரூ.40 வரையும், கத்தரியின் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.27 ஆகவும், வெண்டையின் பண்ணை விலை ரூ.20 முதல் ரூ.22 வரை இருக்கும் என்று கணித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதை பொறுத்து காய்கறிகளின் விலையில் மாற்றங்கள் இருக்கும்.