ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்: கோப்பைகளை தட்டி சென்ற வீரர்கள்

கோவை வெள்ளலூர் பகுதியில் புலியகுளம் புறா ப்ரண்ட்ஸ் அசோஸ்சியான் தலைவர் குட்டி, அமைப்பாளர் பாபு சார்பாக புலியகுளம் ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் 2021 எனும் மாபெரும் முதலாமாண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட பகுதியை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இறுதி சுற்று முடிவில் பி.எப்.எப்.சி அணியும், ஹைடன் என்ற அணியும் மோதின. இதில் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைடன் அணி வெற்றி பெற்று முதலிடத்தையும் பி.எப்.எப்.சி அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தது. போட்டியில் வெற்றி பெற்ற அணியின் வீரர்களுக்கு பதக்கங்களும் கோப்பைகளை விழா குழுவினர் வழங்கினர்.