ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா இலவச தடுப்பூசி முகாம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, கோயம்புத்தூர் ரோட்டரி சாய் சிட்டி ஆகியவை சார்பில் கல்லூரி வளாகத்தில் கொரோனா இலவச தடுப்பூசி முகாம் 11.09.2021 மற்றும் 12.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த முகாமை வட்டாச்சியர் (கோவை வடக்கு) கே.கோகிலமணி தொடங்கி வைத்தார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் சி.வி.ராம்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ஆர்.ரவி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டாக்டர் எஸ்.கௌதம் ஆகியோர் பங்கேற்றனர்.

இம்முகாமில் பொதுமக்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டது. கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரகதீஷ்வரன், சுபாஷினி, நாகராஜன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.