ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா பள்ளியில் தடுப்பூசி முகாம்

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா பள்ளியில், கோவை வெல்பேர் அசோசியேசன், விப்பர் பவுண்டேஷன் மற்றும் ஜித்தோ அமைப்பின் சார்பில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக பள்ளி வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று (06.09.2021) ஜந்தாவது நாளாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகின்ற இந்த தடுப்பூசி முகாமில் அந்த பகுதி மக்கள், தங்களது ஆதார் எண்களை வழங்கி பதிவு செய்து தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். இந்த முகாம் மூலமாக 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பள்ளி வளாகத்தில் தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடக்க முடியாத மாற்று திறனாளிகளுக்கு மருத்துவரே நேரில் வந்து அவர்களின் வாகனங்களில் வைத்து தடுப்பூசிகளை செலுத்தினர். இதில் கோவை வெல்பேர் அசோசியேசன் மற்றும் ஜித்தோ அமைப்பின் தலைவர் ரமேஷ் பாப்னா, விப்பர் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் சர்வான் போஹரா, கோவை வெல்பேர் அசோசியேசன் செயளாளர் ரமேஷ் சூத்தாலியா, ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கல்லூரி செயலாளர் சுனில் நஹாட்டா, நிர்வாகிகளாகளான துர்கா ராம், அஜய், நிர்மல் ஷர்மா, லலித் பாட்டி, ஒபாராம், மணீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.