100 நாள் வாழ்த்து: முதல்வரின் படத்தை அரிசியில் வரைந்த மாணவி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடையும் நிலையில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தனது வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக அரிசியைக் கொண்டு முதல்வரின் படத்தை வரைந்துள்ளார்.

கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுரியில் மூன்றாம் ஆண்டு பி.இ (விவசாயம்) பயிலும் மாணவி மதுராந்தகி. இவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவப்படத்தை 2 அடி * 1.75 அடி அளவில் சுமார் 11,300 அரிசிகளைக் கொண்டு 3 நாட்கள் வரைந்துள்ளார். அந்த அரிசியின் சட்டை பகுதியின் மேல் “தமிழ் வாழ்க ” என எழுதி முதல்வருக்கு தனது 100 -வது நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும், இவர் ஓவிய ஆசிரியரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.