கே.பி.ஆர் மில் லிமிடெட் : 5000 த்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசி

கோவை அரசூர் பகுதியில் அமைந்துள்ள கே.பி.ஆர் மில் லிமிடெடில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கே.பி.ஆர். குரூப்-ஆப்- கம்பெனி கோவை IV-கேர் சார்பில் தனியார் மருத்துவமனை மூலமாக இலவச கொரோனா தடுப்பூசி முகாம் (14.08.2021) அன்று நடைபெற்றது. இம்முகாமினை கே.பி.ஆர். குழுமத்தின் தலைவர் டாக்டர்.கே. பி. ராமசாமி துவக்கி வைத்தார்.

இந்த கொரோனா இலவச தடுப்பூசி முகாமானது, சத்தியமங்கலம், கருமத்தம்பட்டி, அரசூர், நீலாம்பூர், அவிநாசி ஆகிய இடங்களில் உள்ள கே.பி.ஆர் நிறுவனங்களில் நடைப்பெற்றது. இதில் ஒரு நாள் மட்டும் 5000 – த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

மேலும், கே.பி.ஆர். நிறுவனத்தில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கு தடுப்பூசி மட்டுமல்லாமல் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.