தமிழகத்தின் முதல் பெண் பொக்லைன் வாகன ஓட்டுநர்

தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பொக்லைன் வாகனம் இயக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கோவையில் மகேந்திரா & மகேந்திராவின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர் சாரு சிண்டிகேட், தமிழகத்தின் முதல் பெண் பொக்லைன் வாகனம் இயக்கும் பெண் ஓட்டுநரை அறிமுகப்படுத்துகிறது.

மேலும் இந்தக் குழு தமிழகம் முழுவதும் கனரக வாகனங்களை கையாளும் துறையில் 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. சாரு சிண்டிகேட் அறிமுகப்படுத்துகிறது தமிழகத்தின் முதல் பொக்லைன் வாகனம் ஆப்பரேட்டர் அங்கால ஈஸ்வரி அவர்கள். பெண்கள் சாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் கடின உழைப்பைக் கொண்டு இதனை கற்றுக் கொண்டுள்ளார். சமூகத்தில் பெரிய நிலைக்கு வர வேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கு இவர் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.

பெண் தொழில்முனைவோர் ருக்மணி சாமியப்பன் மற்றும் பாரதி சக்தி பாலாஜி பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசுகையில், பொக்லைன் வாகனம் ஆப்பரேட்டர் வேலைக்கு அதிக அளவு பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இப்பயிற்சி பெண்களை சமூகத்தில் உயர்த்த ஒரு காரணியாக அமைக்கிறது. வீட்டு வேலை மட்டுமே செய்து வரும் பெண்களை அவர்கள் விருப்பப்படி அவர்களுக்கு பிடித்த வேலையை செய்ய தூண்டும் என்று நினைத்தோம்.

தொழில் முனைவோர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண் தொழில் முனைவோர்களால் நடத்தப்படுகிறது. பொருளாதார முன்னேற்றம், கல்வி, நகரமயமாதல், கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் அங்கீகாரம் ,ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் பெண் தொழில் முனைவோர்கள் அதிகரித்துள்ளனர்.