மதிய உணவு திட்டத்தை துவக்கி வைத்த எஸ்.பி.வேலுமணி

கோவையில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி வேலுமணி, 12 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் விதமாக மதிய உணவு திட்டத்தை செவ்வாய்க்கிழமை (20.07.2021) துவக்கி வைத்தார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெலுங்கு பாளையம், முத்துமாரியம்மன் கோவில், சாஸ்த்தா நகர், நாராயணசாமி நகர் உட்பட பல்வேறு இடங்களில் முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் பயன்பெறும் வகையில் மதிய உணவு திட்டத்தையும், கொரானா நோயெதிர்ப்பு மருந்துகள் உட்பட நோய்தடுப்பு உபகரகரணங்களையும் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.