பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோவையில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் இன்று (17.06.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலை கட்டுக்கடங்காமல் செல்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசே காரணம் என்று குற்றம்சாட்டி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கோவை சாய்பாபா காலனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ராவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டது.

நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மேலும்,நகர பொறுப்பாளர் வெள்ளிங்கிரி ரமேஷ், சஜீவன், சசிகுமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.