கொரோனா நிவாரணமாக அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மே மாதம் முதற்கட்டமாக 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதையடுத்து 14 வகை பொருட்களுடன் கூடிய மளிகைத் தொகுப்பும், இரண்டாம் தவணையாக 2000 ரூபாயும் ஜூன் 15ம் தேதியான இன்று முதல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மோகனுர் பேரூராட்சிக்குட்பட்ட நியாயவிலைக் கடையில் விலையில்லா கொரோனா நிவாரண பொருள்கள் மற்றும் இரண்டாவது தவணையாக ரூ.2000 வழங்கும் பணியினை சிவகுமார் துவக்கி வைத்தார்.