ரூ. 2 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்கள்

காவேரி குரூப் ஆப் கம்பெனி, ஹோம் பார்க் நிறுவனம் மற்றும் லயன்ஸ் கிளப் ஜூபிடர் இணைந்து கோவை மாநகராட்சி ஆணையரிடம் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான  கொரோனா நிவாரணப் பொருட்களை  வழங்கினர்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சி மீட்டர், முகக் கவசம் மற்றும் ஹேண்ட் ப்ரீ சானிடைசர் (Hands free sanitizer) உள்ளிட்டவை காவேரி குரூப் ஆப் கம்பெனி இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் மற்றும் ஹோம் பார்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினர்.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், கொரோன காலகட்டத்தில் கட்டுமானம் சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு பல்வேறு உதவி புரிந்தும், ஒரு மாத காலமாக தினமும் 100 பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டும், எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் செய்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நிதிக்கு ரூபாய் 1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று 150 ஆக்சி மீட்டர், 5 ஆயிரம் முகக் கவசங்கள், ஹேண்ட் பிரீ சானிடைசர் (Hands free sanitizer) உள்ளிட்டவை ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.