ஆர்.எஸ் புரம் ஆவின் பாலகம்: பால்வளத் துறை அமைச்சர் ஆய்வு

ஊரடங்கு காலத்தில் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு வீட்டின் அருகே கிடைக்கும் விதமாக ஆவின் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆர்.எஸ் புரம் ஆவின் பாலகத்தை பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் ஆய்வு செய்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் நோய்தொற்று சங்கிலித் தொடரை அழிக்க வேண்டும் என முனைப்புடன் முதல்வர், அமைச்சர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகிறோம். அடிப்படைத் தேவைகளான பால், மருத்துவ பொருட்கள் தங்கு தடையின்றி பொது மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்து வருகிறோம். பாலை முழுமையாகப் பெற்று அந்தப் பாலை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

தாம்பரம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். தற்போது திருப்பூர் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதி ஆவின் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.