கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

கோவை அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு இன்று (10.05.2021)ஆய்வு செய்தார்.

கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வர ஏதுவாக அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

மேலும் பொதுமக்கள் தங்களின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தாமல் அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நிறுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் ஆத்துப்பாலம் மின் மயானம், போத்தனூர் செட்டிபாளையம் ரோடு மாநகராட்சி மின் மயானம், மேற்கு மண்டலம் சொக்கம்புதூர் மாநகராட்சி மின் மயானம் ஆகிய மையங்களின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.