தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் (05.05.2021) ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் பாதர் ரேண்டி தெரு மற்றும் கோகுலம் காலனி ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் மருதமலை ரோடு, பி.என்.புதூரில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.