கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு இன்று (29.3.2021)பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்: ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழ்நாட்டு மக்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவை தருகின்றனர் எனவும், பாஜக அதிமுக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள் என்றும் கூறினார்.
பாஜக தமிழ்நாட்டில் காலுன்றி விடக்கூடாது. அதிமுகவை பயன்படுத்தி பாஜக தமிழ்நாட்டில் காலுன்ற பார்க்கிறது எனவும் அவர் கூறினார்.
மாநில உரிமைகள் மற்றும் மாநில நலன்களை காப்பாற்றுவதில் மிகப் பெரிய தோல்வியை அதிமுக அரசு கண்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக, பிரதமர் மோடி படத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யாதது, தோல்வி பயத்தை காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இணைந்து பிரச்சாரம் செய்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுகவிற்கு என கொள்கைகள் உள்ளது. ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன என கேள்வி எழுப்பினார். மக்கள் ஏன் கமல்ஹாசனை பாஜகவின் பி டீம் என சந்தேகப்படுகிறார்கள். அதற்கு கமல்ஹாசன் பதிலளிக்க வேண்டுமென தெரிவித்தார்.