சிலம்பம் சுற்றி வாக்கு சேகரிப்பு  

சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமன் மசக்காளிபாளையம் பகுதியில் சிலம்பம் சுற்றி பொது மக்களிடையே இன்று(29.3.2021) வாக்கு சேகரித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.ஆர்.ஜெயராமன் தினமும் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்.

காய்கறிகள் விற்பனை செய்வது, ஆட்டோ ஓட்டுவது என மக்களிடம் வாக்கு சேகரித்த அவர், இன்று சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மசக்காளிபாளையம் பாலன் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து அங்கு சிலம்பம் சுற்றி அப்பகுதி மக்களிடையே வாக்கு சேகரித்த  பின்னர், வீடு வீடாக  சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.