பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கலை இலக்கிய போட்டிகள்

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் மாநில அளவிலான “சினர்ஜி” அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கலை இலக்கிய போட்டிகள் கடந்த மாதம் இரண்டு நாட்கள் இணையம் மூலம் நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இக்கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு 12.02.2021 நேற்று பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கல்லூரியின் துணை முதல்வர்  பெர்னார்ட் எட்வர்ட் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ராதிகா தலைமை உரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அதிகமான மாணவர்களை போட்டியில் பங்கேற்கச் செய்து ஊக்கப்படுத்திய 50 பள்ளிகளைப் பாராட்டி அப்பள்ளிகளுக்கு சிறப்புக் கேடயம் வழங்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்ற 500 மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. அத்வைத் தாட் அகாடமி பள்ளியின் மாணவ மாணவியர் பிரணவ், ஸ்ரீபூரணா ஆகியோர் அதிகமான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றமைக்காக சிறப்பு பரிசு அளிக்கப்பட்டது.