கற்பகம் கல்லுரியில் பொங்கல் விழா

கோவை ஒத்தக்கால்மண்டபம் கற்பகம் பொறியியல் கல்லூரியில் 12.01.2021 அன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை கற்பகம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். வெவ்வேறு துறைகளைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்கள் 5 குழுக்களாக பிரிந்து ஐந்து வகையான பொங்கல் வைத்தனர்.

பொங்கல் விழாவினையொட்டி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாணவ மாணவிகளுக்காக ஓவியப்போட்டி மற்றும் புகைப்பட போட்டி இணையதள வழியில் நடைபெற்றன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பொங்கல் விழாவை சிறப்பித்தனர். ஆசிரியர்களுக்காக கோலப்போட்டி, பாட்டிலில் நீர் நிரப்புதல், உறியடித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, பம்பரம் விடுதல், அதிர்ஷ்ட கட்டம், பாட்டுக்கு பாட்டு போன்ற போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.