70ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

கோவை: கோவையில் 30 குடும்பங்கள் வீட்டுமனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சவுரிபாளையத்தை அடுத்த ராமலிங்கம்புரம் பகுதி மக்கள் இன்று (21.12.2020) காலை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: நாங்கள் சௌரிபாளையம் ராமலிங்கபுரம் பகுதியில் எங்கள் தாய் தந்தை காலத்திலிருந்து குடியிருந்து வருகிறோம். மேலும் நாங்கள் வசிக்கும் பகுதியில் கட்டிடம் கட்டியும் வீட்டு வரி செலுத்தியும், மின் மற்றும் குடிநீர் இணைப்பு பெற்று வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக எந்த ஒரு நிலமும் வீடு கிடையாது. எனவே எங்களுக்கு நாங்கள் வசித்து வரும் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.