கட்சி கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

கட்சி கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும் எனவும், அது மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி கருத்து தெரிவிப்பது சரியான நடைமுறை அல்ல என தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மருதமலை முருகன் கோவிலுக்கு வருகை புரிந்தார். அவருக்கு முன்னால் மாவட்ட தலைவர் மகேஷ் குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தினேஷ் குண்டுராவ் மருதமலை முருகனை தரிசனம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விதிமுறைகளை பின்பற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், அனைவருக்கும் பொதுவாக இல்லாமல் எதிர்கட்சிகள் நடத்தும் பேரணி, பொது கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக கூறிய அவர், பாரபட்சம் காட்டுவதாலேயே, நேற்று நடைபெற்ற ஏர்கலப்பை யாத்திரையில் போலீசார் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர், காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை நாட்டு மக்கள் இன்னும் கட்சியை விரும்பி வருவதாகவும், இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முக்கிய இடத்தை பிடிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் தொகுதி குறித்த உடன்பாடுகள் குறித்து இன்னும் முடிவு எடுக்கபடவில்லை எனவும், பிறகு அது குறித்து அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதே நேரத்தில்,கட்சி கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும் எனவும்,அது மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி கருத்து தெரிவிப்பது சரியான நடைமுறை அல்ல என தெரிவித்தார்.