20 ஆண்டுகளை நிறைவு செய்த மாருதி சுசூகி ஆல்டோ

மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் கார் இந்திய சந்தையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

ஆல்டோ மாடல் கார் இந்தியாவில் 2000த்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் மாருதி சுசூகி ஆல்டோ சமகாலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களை தந்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையில் வழங்கிவருகிறது. தற்போதைய ஆல்டோ மாடலில் தொடுதிரை ஸ்மாட் பிளே இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், டியூயல் டோன் இண்டீரியர், டியூயல் ஏர்பேக் ஆகிய அம்சங்களை மாருதி சுசுகி வழங்கி உள்ளது.