தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான 65வது வார்டு மாரியம்மன் கோயில் விதி, அண்ணாமலை நகர், இருகூர் பேரூராட்சி எல்.ஜி. நகர், மயிலம்பட்டி ஊராட்சி ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகள் மற்றும் அப்பகுதிகளில் அமைக்கப்பட்டு மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல்பாண்டியன், தேசிய நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மாநகராட்சி கிழக்கு மண்டல கண்காணிப்பாளர் சாந்தி, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் முருகன், சூலூர் வட்டாட்சியர் மீனாகுமாரி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.