கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் 5 மண்டலங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா முதலுதவி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு நோயின் தன்மையை பொருத்து மருத்துவ அலுவலர்களால் நோயாளிகள் தகுந்த சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படுவார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் பதட்டம் அடையாமல் கோவை மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள மையங்களில் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா முதலுதவி சிகிச்சை மையங்கள் :
- மத்திய மண்டலம் : 0422-4279467
பத்மாவதி கல்சுரல் மையம்
- தெற்கு மண்டலம் :
CBM கல்லூரி, கோவைப்புதூர்
- வடக்கு மண்டலம் : 0422-2560381
இராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி வளாகம், ஆவாரம்பாளையம்.
- மேற்கு மண்டலம் : 0422-2450099
அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, லாலிரோடு.
- கிழக்கு மண்டலம் : 0422-2595950
வெங்கடலட்சுமி திருமண மண்டபம், சிங்காநல்லூர்.
கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் 1077, 0422-2302323, 9750554321.