ரோட்டரி இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப் சார்பில் தீயணைப்பு துறையினருக்கு இலவச சானிடைசர்

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தீயணைப்புத் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள மாவட்ட தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் ரோட்டரி இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப் சார்பில் தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் வீரர்களுக்கு சானிடைசர் கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி ஜெகதீசன், உதவி அதிகாரி தவமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை ரோட்டரி இண்டஸ்ட்ரியல் தலைவர் ராஜசேகர், நிறுவன தலைவர் வக்கீல் பிரபுசங்கர், செயலாளர் பிரபுராம், இயக்குநர் வேல்முருகன், என்ஜினியர் சபி ஆகியோர் கலந்து கொண்டனர்.