ஒண்டி வீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள காந்தி நகரில் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

தலித் மக்கள் விடுதலை கழகம் சார்பாக நடைபெற்ற இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகாராஜன் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன் ஆகியோர் கலந்து கொண்டு ஒண்டி வீரனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஹோமியோபதி மாத்திரையான ஆர்சனிக் ஆல்பம் குளிகைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதம மந்திரி கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் தமிழ்நாடு ஆலோசணை குழு உறுப்பினர் செல்வகுமார், ஒண்டிவீரனுக்குக்கு நெல்லையில் உருவாக்கிய  நினைவு மண்டபத்தை சீரமைக்க நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தலித் மக்கள் விடுதலை கழகப் பொது செயலாளர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.