முகக்கவசம் அணியாதவரை கண்டித்த ஆட்சியர்

சூலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேற்று, ஆய்வு செய்தார்.

பேருந்து நிலையத் திறப்பு விழா குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியரிடம், முகக்கவசம் அணியாமல் மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவரிடம், முகக்கவசம் எங்கே? என ஆட்சியர் கேட்டதற்கு, “காரில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்” என்று கூறி பதட்டமடைந்து வேட்டியால் முகத்தை மறைக்க முயற்சித்தார்.

அதற்கு ஆட்சியர், “மாஸ்கே போடாம வந்துருக்கீங்க… அவனவன் செத்துட்டு இருக்கான கொரோனாவால, மாஸ்க் இல்லாம வர்ரீங்க்” என ஆட்சித்தலைவர் அவரை கண்டித்தார்.

அதை, தொடர்ந்து, அவர் முகக்கவசத்தை அணிந்து வந்து, விநாயகர் சிலை அகற்றம் குறித்த மனுவை அளித்தார்.