மென்பொருள் இந்தியா ஹேக்கத்தான் 2020 ல் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல் பரிசு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், இயந்திர பொறியியல் மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர் குழு மென்பொருள் இந்தியா ஹேக்கத்தான் 2020 இல் பங்கேற்று ரொக்க விருதுகளுடன் முதலிடம் பிடித்தது.

நிலையான வளர்ச்சியில் தொழில்களில் இருந்து வரும் CEMS / CEQMS மாசுபாடுகளை கண்காணிப்பதற்கான கிளவுட் அடிப்படையிலான பயன்பாட்டின் வளர்ச்சி எனும் அறிக்கையில் அவர்கள் பணியாற்றினர். 168 பங்கேற்பாளர்களைக் கொண்ட 28 அணிகளில் இந்த அணி முதலிடத்தைப் பிடித்தது.

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் ஜெயராம், ஜெயந்தி, தயானிதி பாலாஜி, பேபி ஷாலினி, தியானேஷ்வரன் மற்றும் ஜமால் ரபியா ஆகியோர் அடங்கிய மாணவர் அணி இணை பேராசிரியர் கிங்ஸி கிரேஸின் வழிகாட்டலில் முதல் பரிசு ரூ.1 லட்சம் தொகையை பெற்றுள்ளார்கள்.

தகவல் தொழில்நுட்பம் துறையை சேர்ந்த அருணாச்சலம் மற்றும் தனுஷ்குமார் ஆகியோர் அடங்கிய மாணவர்கள் குழு துறையின் இணை பேராசிரியர் ப்ரீத்தி ஹாரிஸ் வழிகாட்டலில் IBM – Code Global Challenge Edition – the TechGig Code Gladiators 2020  # CodeInQuarantine 150 நாட்கள் ஹேக்கத்தான் போட்டியில் கலந்து கொண்டு ரூ 1.5 லட்சம் பரிசு தொகையை பெற்றுள்ளார்கள்.

இயந்திர பொறியியல் மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையை சேர்ந்த ரிஷி, ஜெகதீஷ், ரிபி, விக்னேஷ், சந்தோஷ் குமார் ஆகிய மாணவர்கள் உதவி பேராசிரியர் பிரணேஷ் மற்றும் உதவி பேராசிரியர் ராகவபிரியா ஆகியோரின் வழிகாட்டலில் TATA Crucible Hackthon 2020 தெற்கு மண்டல பதிப்பில் கலந்துகொண்டு முதலிட விருதும் ரொக்கதொகையாக ரூ. 70,000 / – பெற்றுள்ளனர்.