நிவாரண பொருட்கள் வழங்கிய பிஷப் அம்புரோஸ் கல்லூரி

கோவை, பிஷப் அம்புரோஸ் கல்லூரியும் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து தத்தெடுத்திருந்த கரடிமடை கிராமத்து மக்களுக்கு பிஷப் அம்புரோஸ் கல்லூரியின் பேராசிரியர்கள் அனைவரும் இணைந்து கரடிமடை பகுதியில் வாழும் மக்களுக்கு அரிசி, முக கவசம், கபசுர குடிநீர் போன்றவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிஷப் அம்புரோஸ் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் பீட்டர் ராஜ், கரடிமடை முன்னாள் தலைவர் சக்திவேல், தென்கரை பேரூராட்சி செயலர் மீனாகுமாரி, பேரூர் உதவி காவல் ஆய்வாளர், பிஷப் அம்புரோஸ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுரேஷ், கல்லூரியின் பேராசிரியர் லியோ, சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.