சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.25.00 லட்சம் நிவாரணம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திருப்பூர் சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.25.00 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க. விஜயகார்த்திகேயன் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள். அருகில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், ஆகியோர் உடன் உள்ளனர்.