மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வைசியாள் வீதி காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பா.ஜ.க. மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், ராம்நகர் செந்தில்குமரன் திரையரங்கம் வரை சங்கல்ப பாத யாத்திரை சென்றார். இதில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.