பூமியை சுற்றும் துணைக் கோளான நிலவை ஆராய்ச்சி செய்ய இந்த விண்கலம் அனுப்படுகிறது. இந்த விண்கலம் ஏற்கனவே கடந்த 15 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஒரு சில தொழில்நுட்ப கோளறு காரணமாக கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டுவிட்டடது. அதனால் இதனை இன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது
கடந்த 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணுக்கு அனுப்பட இருந்தது, அனால் சில தொழில்நுட்ப கோளறு காரணமாக இது நிறுத்தபட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திராயன் 2 விண்கலத்தை ஏவும் ஜிஎஸ்எல்வி மார்க்- 3 ராக்கெடில் ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப்பட்டுள்ளது. இனி மேல் தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்பட சாத்தியமே இல்லை. அதனால் சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும், என்று கூறியுள்ளார்.
அதே போல், நிலவின் தென் துருவம் மற்றும் நிலப்பரப்புகளை ஆராய்வதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விண்கலமான சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.கடந்த வாரம் இதனை ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவப்படும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. இதன் பயண தூரம் 3,84,000 கி.மீ மற்றும் இதன் எடை 3,850 கிலோ .