மீனாட்சி அம்மன் கோவிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இதில் கார் பார்க்கிங் அமைப்பதற்கான பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கு பாதாள அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது முதலில் ஒரு தூண் இருப்பது போன்று  தென்பட்ட நிலையில் இதனை பின்தொடர்ந்து தோண்டிய போது  10 அடி உயரம் கொண்ட தூண் என்றும் அதனை தொடர்ந்து ஒரு பாதாள அறை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணி மங்கம்மா காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு கழித்து இந்த இப்படி ஒரு இடம் இருப்பது தெரிய வந்ததால்  மக்களிடையே இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.