கோவை சுங்கம் புறவழிச்சாலையில் உள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் இன்று முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர் அருட் தந்தை R.D.E.ஜெரோம் மற்றும் கல்லூரி முதல்வர் அ.பீட்டர் ராஜ் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய R.D.E.ஜெரோம் அவர்கள் மாணவர்கள் எவ்வாறு தங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதை குறித்து விளக்கினார். கல்லூரி முதல்வர் அ.பீட்டர் ராஜ் அவர்கள் மாணவர்களுக்கு கல்லூரியின் விதி முறைகளையும் சட்ட திட்டங்களையும் எடுத்துரைத்தார். மூன்றாம் ஆண்டு மாணவி பிரின்சி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களும், முதலாமாண்டு மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.