மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொறுப்பாளர்கள் சேர்க்கை தீவிரம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தமிழ்நாடு முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இந்நிலையில் 600க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பொறுப்பாளர்களை அறிவித்ததைத் தொடர்ந்து கோவை வடக்கு மாவட்ட, மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளராக தம்புராசு அவர்களை நியமித்தார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் பூங்கொத்து கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தனர். சமூக சேவையில் மக்களுக்கு ஏற்ப சேவைகளை செய்து வருவதாகவும், மக்கள் நீதி மய்யம் வருகின்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற இப்போதே இருந்து பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இதில் கவுண்டபாளையம் தொகுதி நாகராஜ், சசிகுமார், மகேந்திரன் மற்றும் மகளீர் அணி ஆண்டாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.