5 மாநில தேர்தல்களில் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பின் காரணமாகவே பா.ஜ.க தோல்வியை சந்தித்து இருக்கின்றது எனவும், ஆனால் அதை மாற்றுகின்ற வல்லமை பா.ஜ.க விற்கு உண்டு என மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவையில் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் காந்திபுரம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் களை சந்தித்தனர். அப்போதுநடைபெற்று முடிந்த தேர்தலில் கிடைத்த தோல்வி என்று தாங்க முடியாத வேதனை என்றாலும், மக்கள் தீர்ப்பை பா.ஜ.க ஏற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்த அவர், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற போது அனைத்து கட்சிகளும், எலெக்ட்ரானிக் மிஷினை கொண்டு வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டினர்.அதே எலெக்ட்ரானிக் மிஷன் மூலமாகவே காங்கிரஸ் எப்படி வெற்றி பெற முடிந்த்து என கேள்வி எழுப்பினார்.
மக்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் வெற்றி பெறுகின்றனர், ஒரு சில இடங்களை இழந்ததால் மத்திய பிரதேசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கின்றோம், ராஜஸ்தானிலும் சில இடங்களை இழந்து இருக்கின்றோம் , சத்தீஸ்கரில் தோல்வி அடைந்து இருக்கின்றோம் என தெரிவித்தார். ஆனால் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை போல காங்கிரஸ் கட்சியினர் பேசுகின்றனர் என கூறிய அவர், தெலுங்கானா தேர்தலில் துவக்கத்திலேயே காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்திருக்கின்றது எனவும் தெரிவித்தார். எங்களை பொறுத்த வரை தோல்வி என்பது மெருகூட்டி கொள்வதற்கும், சோதித்து கொள்வதற்கும் என உணர்கின்றது எனவும் தெரிவித்தார். மீண்டும் மோடி பிரதமராகவார் எனவும்,கங்கையும் காவிரியும் இணைக்கும் திட்டத்திற்கு மீண்டும் பிரதமராக வந்து மோடி அடிக்கல் நாட்டுவார் எனவும் தெரிவித்தார்.
வரும் 15 ம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரி,கோவை,நீலகிரி,நாமக்கல்,சேலம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளையும் தொண்டர்களையும் பிரதமர் மோடி, வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக சந்திக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் வாழும் காமராசராக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்,. என்ன காரணத்தால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லப படுகின்றது என தெரியவில்லை எனவும் குற்றசாட்டுகளை சொல்பவர்கள் நிதானித்து சொல்லவேண்டும் எனவும் தெரிவித்தார். கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய குழு வந்து பார்த்து புரிந்து கொண்டு இருக்கின்றது எனவும், பாரத பிரதமர் தமிழகம் மீது பரிவும் பாசமும் கொண்டவர் நிச்சயம் பெரிய உதவியை செய்வார் எனவும் தெரிவித்தார்.
கஜா பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான தென்னை நாற்றுகளை உடனடியாக உற்பத்தி செய்வது என்பது சாத்தியமில்லை எனவும், தென்னை வாரியம் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கமல் ஒரு அரசியல் கட்சியின் குழந்தை தலைவராக இருக்கின்றார். அவர் இதுவரை வெற்றி தோல்வியை அவர் சந்திக்க வில்லை. எனவே இப்போது அவருக்கு பதில் சொல்ல தேவையில்லை ரஜினி தனி மனிதராக வெளிப்படையாக வெள்ளை உள்ளத்துடன் பேசிகின்றார். மூன்று நாட்களுக்கு முன்னர் மோடி கடுமையாக உழைப்பதாக சொன்னார்.இப்போது தோல்வி அடைந்து இருப்பதாக சொல்லி இருக்கின்றார்.அவர் அறிக்கையில் இதற்கு மேல் உள்ளே சென்று பார்க்க விரும்பவில்லை என தெரிவித்தார்.
5 மாநில தேர்தல்களில் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பின் காரணமாகவே பா.ஜ.க தோல்வியை சந்தித்து இருக்கின்றது எனவும், அதை மாற்றுகின்ற வல்லமை பா.ஜ.க விற்கு உண்டு எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.