ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் ரென்ட்லி சாப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர். நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி மற்றும் ரென்ட்லி சாப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிஜாய் சிவன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவிகளுக்கான இன்டர்ன்ஷிப், பயிலரங்குகள் மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான அண்மைக்காலத் திறன்களை வளர்க்கப் பயிற்சி வகுப்புகளை நடத்தவும் வாய்ப்பாக அமையும் என்று கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா அவர்கள் தெரிவித்தார்.