ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்யாலயம் பள்ளியில் கோலப்போட்டி

ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்யாலயம் பள்ளியில் வண்ண கோலப்போட்டி அண்மையில்  நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஸ்ரீரேகா  மற்றும் முதல்வர் பிருந்தா தேவி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் நீலாம்பூர் பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டியின் நடுவர்களான லட்சுமி பிரியா,  தேன்மொழி மற்றும் காயத்ரி ஆகியோர் சிறப்பான கோலத்தைத் தேர்வு செய்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூபாய் 6000 ரொக்க பரிசாக வழங்கப்பட்டன.