காட்டு தீயை அணைக்க உதவிய பாரத மாதா

கோவை உடையாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அத்வைத் பள்ளி அருகில் உள்ள காட்டில் கோடை வெயில் தாக்கத்தால் ஏதிர்பாரதவிதமாக காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் பகுதி லைன்மேன் அந்தோணி உடன் இணைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து மின் விநியோகத்தை நிறுத்தினோம். மேலும் தீயணைப்பு துறை வரும்வரை காத்திருக்காமல் அருகில் உள்ள மருத்துவர் வினய் பாலாஜி மற்றும் அவர்களது நண்பர்கள் வீடுகளில் உள்ள போர்தண்ணீர் குழாய் மூலம் எங்களலால் முடிந்த வரை பற்றி எரியும் தீயை அணைத்தோம். தீயணைப்பு வீரர்கள் வந்தவுடன் அவர்களுடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம். இந்த காட்டு தீயை ஒழிக்கும் பணியில் நிர்வாகிகள் கெளரி சங்கர், பிரகாஷ், பிரவீன், சுரேஷ், மெய்யரசன், ஷ்யாம் மற்றும் ராஜா உள்ளிட்டோர் உதவினர்.