ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ‘அ’ எழுதி படிப்பைத் தொடங்கிய குழந்தைகள்!

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் என்றழைக்கப்படும், குழந்தைகளுக்கான கல்வி கற்பிக்கும் பணியை பெற்றோர் முன்னிலையில், வேதவிற்பன்னர்கள் இன்று தொடங்கி வைத்தனர். அதன்படி இன்று பச்சரிசி, வெற்றிலை உள்ளிட்ட பூஜை பொருட்களோடு பெற்றோர் குழந்தைகளோடு கோவிலுக்கு வந்து, வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.