சென்னை மொபைல்ஸ் டிஜிட்டல் ஹப்: துடியலூர், வடவள்ளியில் புதிய கிளை

சென்னை மொபைல்சின் வீட்டு உபயோக பொருட்களுக்கான டிஜிட்டல் ஹப் தனது புதிய கிளைகளை துடியலூர் மற்றும் வடவள்ளியில் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியுள்ளது.

கோவை மட்டுமின்றி தமிழகம், கேரளா என பல்வேறு இடங்களில் மொபைல் விற்பனையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள நிறுவனம் சென்னை மொபைல்ஸ். இந்நிலையில் இதன் கிளை நிறுவனமான டிஜிட்டல் ஹப் வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனையகமாக தொடர்ந்து பல கிளைகளை தொடங்கி வருகிறது.

இந்நிலையில் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் டிஜிட்டல் ஹப் புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது. இதில் சென்னை மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் சம்சு அலி மற்றும் அவரது குடும்பத்தார், ஜி.என்.மில்ஸ் கிளை கட்டிட உரிமையாளர் சந்தோஷ் குமார் மற்றும் அவரது உறவினர் ஜெகதீஷ் குடும்பத்தார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கிளையை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.

இந்த புதிய ஷோரூமில் மொபைல் போன்களுடன், அனைத்து வகை முன்னனி பிராண்டுகளின் ஸ்மார்ட் எல்.இ.டி டிவிக்கள், லேப்டாப்கள் மற்றும் வாசிங் மெசின்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், குளிர்சாதன கருவிகள் உட்பட வீடுகளுக்கு தேவையான பல்வேறு பொருட்கள் சிறந்த தள்ளுபடி ஆபர்களுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. திறப்பு விழா சலுகையாக ரூபாய் இருபதாயிரத்திற்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இலவச வெட்கிரைண்டர் வழங்க உள்ளதாக இதன் உரிமையாளர் சம்சு அலி தெரிவித்தார்.