பாரத மாதா : தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்!

கோவை உடையாம்பாளையத்தில் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று வடவள்ளி கோகுலம் சேவாஸ்ரமம் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து வகையான பழவகைகள், அரிசி, பிஸ்கட், சுண்டல் கடலை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களும், ஒரு நாள் முழு அன்னதானமும் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நிர்வாகிகள் கெளரி சங்கர், கார்த்திக், கெளதம், ஆனந்த் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.