மேற்கு மண்டலத்தை மக்கள் நீதி மய்யத்தின் கோட்டையாக மாற்றுவோம்!

– மகேந்திரன்

கோவை: மேற்கு மண்டலத்தை மக்கள் நீதி மய்யத்தின் கோட்டையாக மாற்றுவோம் என்று அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கபட்ட பின் அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின் மகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் போட்டியிடுகின்றார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரச்சாத்தை துவங்க ஆர்வமாக இருக்கின்றோம்.

மக்கள் நீதி மய்யத்தின் கோட்டையாக மேற்கு மண்டலம் மாற்றப்படும். கோவை மக்கள் பல மாற்றங்களின்

முன்னோடியாக இருப்பவர்கள். அரசின் உதவி இல்லாமல் பல நல்ல காரியங்களை கோவை மக்கள் செய்துள்ளனர் என்பதால் இங்கு போட்டியிட வேண்டும் என கமலஹாசனை வலியுறுத்தினோம். இதை தொடர்ந்தே அவர் இங்கு போட்டியிடுகின்றார்.

வளர்ச்சிக்கான உதவி இல்லாமல் வளர்ந்த நகரம் கோவை என்பதால் இங்கு போட்டியிடுமாறு கமலை கேட்டுக்கொண்டோம். மக்களவை தேர்தலில் மக்கள் ஆதரவு கொடுத்த பல தொகுதிகளில் இதுவும் ஒன்று. அதனால் மக்கள் இந்த மாற்றத்திற்கு உதவுவார்கள்.கறை பட்ட கையுடன் கைகோர்க்க மாட்டோம், மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கின்றோம்.

நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி இன்னமும் முடிவு செய்ய வில்லை. வரும் புதன் கிழமைக்குள் ஏதோ ஒரு நாள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு மகேந்திரன் தெரிவித்தார்.