பெண் ஊழியர்களுக்கான கபடி டோர்னமெண்ட்

கோவை அரசூரில் உள்ள கேபிஆர் மில் லிமிடெட்-ல் பெண் ஊழியர்களுக்கான ஸ்ரீ பழனிச்சாமி கவுண்டர் செல்லம்மாள் கபடி டோர்னமெண்ட் நடைபெற்றது.

இப்போட்டியை கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி துவக்கி வைத்தார்.

இதில் சத்தியமங்கலம் மில்ஸ், அரசூர் மில்ஸ், அரசூர் கார்மெண்ட்ஸ், அவனித்த மில்ஸ், நீலம்பூர் மில்ஸ், குவாண்டம் த்ரீ, தெக்கலூர் கார்மெண்ட்ஸ் மற்றும் கருமத்தம்பட்டி மில்ஸ் ஆகிய 8 அணிகள் இப்போட்டியில் பங்கு பெற்றது.

இதில் வெற்றி பெற உள்ள அணிக்கு கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி அவர்களால் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.