அன்னபூர்ணா மசாலாவின் புதிய அறிமுகம்

மதுரை மட்டன் சுக்கா மசாலா முதல் நெல்லை புளிக்குழம்பு மசாலா வரை தமிழ்நாட்டின் பிரபலமான அந்தந்தப்பகுதியின் சிறப்புமிக்க சுவையை உங்கள் சமையலறைக்கே கொண்டு வருகிறது.

கோவை: ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி அல்லது தூத்துக்குடி சால்னாவின் ஒரிஜினல் உண்மையான சுவையை கொண்டுவர அன்னபூர்ணாவில் புதிய தமிழ்நாட்டின் கலவை மற்றும் மசாலாவை அறிமுகம்படுத்தியுள்ளது. இதனால் பாரம்பரியமிக்க, நகரங்கள், சிறுநகரங்கள், மாவட்டங்களின் சிறப்பு மிக்க உணவை தயாரிக்க முடியும்.

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா, மதுரை மட்டன் சுக்கா மசாலா, திண்டுக்கல் மட்டன் குழம்பு மசாலா, தூத்துக்குடி சால்னா மசாலா, கொங்குநாடு நாட்டுக் கோழி குழம்பு மசாலா, நெல்லை புளிக்குழம்பு மசாலா, செட்டிநாடு மிளகு குழம்பு மசாலா, திண்டுக்கல் பிரியாணி மசாலா மற்றும் ஆம்பூர் பிரியாணி மசாலா போன்ற ஒன்பது வகை அன்னபூர்ணாவின் புதிய மாசாலாக்களைக் கொண்டு சமைக்கலாம். இவை, 40 கிராம் மற்றும் 80 கிராம் பவுச் மற்றும் கார்டன் பெட்டிகளில் கிடைக்கும். தமிழ்நாட்டில் சிறிய கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து கடைகளிலும் இவை, ரூ. 35 முதல் ரூ.100 வரை கிடைக்கும்.

அன்னபூர்ணாவின் டிஎன் பிளன்ட், மண்டல அளவிலான மசாலா வகைகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, போட்டியில் இறங்கியுள்ளது. இப்புதிய வகை மசாலாக்கள் குறித்து, அன்னபூர்ணா மசாலாக்களின் செயல் இயக்குனர் விஜய் பிரசாத் கூறுகையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் பாரம்பரிய சிறப்புமிக்க உணவு வகைகள் உலகஅளவில் பரவியுள்ளன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு சுவைகளை உலகில் வேறு எங்கும் அதே சுவையில் தருவது கடினம்.

அன்னபூர்ணா துவக்கப்பட்ட 1975ம் ஆண்டு முதல், வாடிக்கையாளர்களின் சுவையையும் விருப்பத்தையும் புரிந்து கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தற்போது, இந்திய பாரம்பரிய உணவு வகைகளை மீண்டும் ஆர்வமுடன் புத்துணர்வுடன் சுவைக்க தொடங்கியுள்ளனர். இது, அந்தந்த பகுதிகளின்உணவு வகைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த விருப்பம் எங்களது தயாரிப்பிற்கு பெரும் வாய்ப்பாக மாறியுள்ளது, என்றார்.

அடிப்படையிலேயே அன்னபூர்ணா, வெற்றிக்கான மிகப்பெரிய, மிக முக்கிய உணவு செய்முறைகளைக் கொண்டுள்ளது. இந்திய மாசாலாக்களையும், நாட்டின் பாரம்பரிய உணவை பற்றியும் ஆழ்ந்து அறிந்து அவற்றை உருவாக்கியுள்ளது. கடந்த  40 ஆண்டுகளாக வெற்றிகரமான பெயரை பெற்றுள்ள அன்னபூர்ணா, புதிய சந்தையில் நுழைய தயாராகியுள்ளது. இந்த கம்பெனி, கோவையில் 30,000 சதுரடியில்  ஒவ்வொரு நாளும் 35 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலையை கொண்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குழுவுடன், விரைவான வளர்ச்சித்திட்டத்துக்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.