டாஸ்மார்க் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

டாஸ்மார்க் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்  மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி, பாரதி பூங்கா பகுதியில் டாஸ்மார்க் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்  மாநகராட்சி ஆணையாளர், டாஸ்மார்க் மண்டல மேலாளர் சாதனைகுறள் ஆகியோர் முன்னிலையில் டாஸ்மார்க் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், 158 டாஸ்மார்க் கடைகளில் இருந்து வந்திருந்த 150 பணியாளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ரூ.1000 மதிப்பிலான நோய் தடுப்பு சக்தி தொகுப்பு பெட்டகங்கள் வழங்கப்பட்டது. மேலும், அனைத்து டாஸ்மார்க் கடைகள் மட்டும் குடோன்களில் கிருமிநாசினி மருந்து தெளித்து தீவிரமாக நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்.