1 லட்சம் முகக்கவசம் வழங்கும் மக்கள் சேவை மையம்

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பொதுமக்களுக்கு 1 லட்சம் முகக்கவசம் வழங்கும் நிகழ்வின் துவக்க விழா நடைபெற்றது. இதன் துவக்கமாக முதலில் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. அதன் பின்பு, தன்னார்வலர்கள் மூலமாக இந்த 1 லட்சம் முகக்கவசமும் வீடு தேடி சென்று வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை அரசு மருத்துவமனை முன்னாள் டீன் டாக்டர் இந்திரா ப்ரனேஷ் கலந்துகொண்டார்.