வருண் வாட்ட்ர் கெனான் மூலம் மருந்து தெளிக்கும் பணி

கோவை மாநகர போலீசார் வருண் வாட்டர் கெனான் (Varun Water Cannon) வாகனம் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

14,000 லிட்டர் கொள்ளவு கொண்ட இந்த வாகனத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் வளாகம், நீதிமன்றம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினையை சாலையில் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துமீறி போராட்டத்தில் ஈடுபடுவர்களை விரட்டி அடிக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்க பயன்படுத்தப்படும் வருண் வாட்டர் கெனான் வாகனம் தற்போது அச்சுறுத்ததலை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகர காவல் துறை பயன்படுத்தி வருகிறது.