“சொல்லின் செல்வர்” விருது பெற்ற கவிதாசனுக்கு பாராட்டு விழா

தமிழக அரசின் “சொல்லின் செல்வர்” விருதை ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுத் துறை இயக்குநர் சிந்தனைக் கவிஞர் கவிதாசனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதற்காக ரூட்ஸ் நிறுவனங்களின் சார்பில் கவிதாசனுக்கு இந்துஸ்தான் கலை கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் கே. ராமசாமி முன்னிலை வகித்தார். இவ்விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளார், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மேற்கு மண்டல காவல் துறைத்தலைவர் கே. பெரியய்யா, நன்னெறி கழகத்தின் தலைவர் இயகோகா சுப்பிரமணியம், இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் ரூட்ஸ் நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளார், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மேற்கு மண்டல காவல் துறைத்தலைவர் கே. பெரியய்யா, நன்னெறி கழகத்தின் தலைவர் இயகோகா சுப்பிரமணியம், இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், ரூட்ஸ் நிறுவங்களின் தலைவர் கே. ராமசாமி ரூட்ஸ் நிறுவங்களின் முதன்மை நிதி அதிகாரி கே. ரவி ஆகியோர் சிந்தனை கவிஞர் கவிதாசனுக்கும் அவரது மனைவிக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.
அதன் பின்னர் கவிதாசன் நன்விதையாளர் என்ற புத்தகத்தை பேருராதீனம் சாந்தலிங்க அடிகளார் வெளியிட மேடையிலிருந்தோர் பெற்றுக் கொண்டனர்.